2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கரையொதுங்கிய இரு சடலங்கள் மீட்பு

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 02 , மு.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

யாழ். தீவுப் பகுதி கடலிலிருந்து கரையொதுங்கிய இரண்டு சடலங்களை ஊர்காவற்றுறைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.

வேலணை, சாட்டி கடற்பரப்பிலிருந்து கரையொதுங்கிய ஆணொருவரின் சடலத்தையும் புங்குடுதீவு கடற்பரப்பிலிருந்து கரையொதுங்கிய பெண்ணொருவரின் சடலத்தையும் நேற்று வியாழக்கிழமை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட இரண்டு சடலங்களும் மிகவும் அழுகிய நிலையில் காணப்படுவதுடன், இதுவரையில் இந்த இரண்டு சடலங்களும் அடையாளம் காணப்படவில்லையெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த இரண்டு சடலங்களும் யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும்  பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X