Freelancer / 2022 ஓகஸ்ட் 10 , பி.ப. 02:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சகா)
கல்முனை வலயத்தில் மிகவும் பின்தங்கிய அட்டப்பள்ளம் விநாயகர் வித்தியாலய மாணவர்கள் இருவர் மாவட்ட மட்டத்தில் பங்குபற்றி 2022 ஆம் ஆண்டு மாகாண மட்ட விளையாட்டுப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
12 வயதிற்குட்பட்ட நீளம் பாய்தல் போட்டியில் து.பவிக்ஸா 1ஆம் இடத்தையும், 14 வயதிற்குட்பட்ட குண்டுபோடுதல் போட்டியில் ச.டோஜித் 2ஆம் இடத்தையும் பெற்று சாதனை படைத்து உள்ளனர்.

மாணவர்களைப் பாராட்டும் நிகழ்வில் அதிபர் ச.ரகுநாதன், பிரதிஅதிபர் த.நடேசலிங்கம், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் த.ம.றிஸ்மி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இப் பாடசாலையில் விளையாட்டுமைதானம் இல்லை, கல்முனை கல்வி வலயத்தில் உள்ள அதிகஷ்ரப்பிரதேச பாடசாலை பயிற்றுவிப்பாளரின் அயராதமுயற்சி வெற்றிக்கு காரணம் என அதிபர் ச.ரகுநாதன் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .