Freelancer / 2021 ஜூன் 29 , மு.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
கொவிட்- 19 தொற்று பரவலை அடுத்து அம்பாறை மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களின் உத்தியோகத்தர்களின் வரவுகள் 50 சதவீதமாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதோடு, சுழற்சி முறையில் உத்தியோகத்தர்கள் வரவழைக்கப்பட்டு பொதுமக்களுக்கான அத்தியாவசிய அவசரத் தேவைகளுக்கான சேவைகள் வழங்கப்பட்டு வருவதாக, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஏ.எம். அப்துல் லத்தீப், இன்று (29) தெரிவித்தார்.
அசாதாரண சூழ்நிலையில் பொது மக்களுக்கான சேவைகளை பாதுகாப்பான முறையில் அவர்களின் காலடிக்கு கொண்டு சேர்க்கும் பணியை பிரதேச செயலகம் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் வரவுகள் 50 சதவீதமாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதோடு, சுழற்சி முறையில் உத்தியோகத்தர்கள் வரவழைக்கப்பட்டு பொதுமக்களுக்கான அத்தியாவசிய அவசரத் தேவைகளுக்கான சேவைகள் வழங்கப்பட்டு கொண்டிருக்கின்றன.ஏனைய அரச திணைக்களங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்களும் உத்தியோகத்தர்களின் வரவுகள் 50 சதவீதமாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதியும் அவர்களுக்குரிய சேவைகளை அசௌகரியம் இன்றி பெற்றுக் கொடுக்கும் நோக்கோடும் சேவைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மறு அறிவித்தல் வரை பொது மக்கள் அத்தியவசிய தேவைகளுக்காக மட்டும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பிரதேச செயலகங்கள் மற்றும் அரச திணைக்களங்களுக்கு சென்று சேவைகளை பெற்றுக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
M
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago