Shanmugan Murugavel / 2026 மார்ச் 11 , பி.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவில் தங்கியிருப்பதற்கான விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்ட ஈரானிய கால்பந்தாட்ட குழுவின் இரண்டு உறுப்பினர்களில் ஒருவர் அவரது மனதை மாற்றியதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
நேற்று இரவு தங்கியிருப்பதற்கு முடிவெடுத்த இரண்டு பேரிலொருவர் ஏற்கெனவே நாட்டை விட்டு வெளியேறிய சக வீராங்கனைகள் சிலரிடம் பேசியதாகவும் தனது மனதை மாற்றியதாகவும் குடியேற்ற அமைச்சர் டொனி புர்கே பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக தமது பாதுகாப்பு தொடர்பாக கரிசனைகளைக் கொண்டிருந்தமை காரணமாக தங்கியிருப்பதற்கு வீசாக்கள் வழங்கப்பட்ட ஐந்து வீராங்கனைகளையும் ஒரு வீராங்கனையும் பயிற்சியாளர் குழாமின் ஒரு அங்கத்துவருமாக இருவர் இணைந்திருந்தனர்.
எஞ்சிய ஈரானிய வீராங்கனைகள் அவுஸ்திரேலியாவை விட்டு நேற்றிரவு வெளியேறியிருந்தனர்.
மனம் மாறிய வீராங்கனையை ஈரானிய தூதரகத்துடன் தொடர்பு கொள்ளுமாறு சக வீராங்கனைகள் தெரிவித்த நிலையில், ஏனையவர்கள் உடனடியாக இடமாற்றப்பட்டிருந்தனர்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago