எம்.எஸ்.எம். ஹனீபா / 2018 ஜூலை 02 , பி.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இஸ்மாயில்புரம், வளத்தாப்பிட்டிப் பிரதேசத்தில் 4 வயதுச் சிறுவனுக்கு கரண்டியால் சூடு வைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண்ணொருவரை, எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, சம்மாந்துறை நீதவான் எச்.எம்.எம்.பஸீல், நேற்று (01) உத்தரவிட்டர்.
அயல்வீட்டுச் சிறுவனுக்கு, கடந்த ஜூன் மாதம் 29ஆம் திகதி கரண்டியால் சூடு வைத்ததாக சிறுவனின் பெற்றோரால் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து, சந்தேகநபரான மேற்படி பெண், கடந்த சனிக்கிழமை (30) கைது செய்யப்பட்டார்.
2 hours ago
2 hours ago
2 hours ago
24 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
24 Jan 2026