2025 மே 02, வெள்ளிக்கிழமை

ஒலுவில் மீன்பிடித் துறைமுக நுழைவாயிலிலுள்ள மணலை அகற்ற நிதியொதுக்கீடு

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 20 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் செல்லும் நுழைவாயிலில் நிரம்பியுள்ள மணலை  அகற்றுவதற்கு முதற்கட்டமாக 40 இலட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நடவடிக்கை எடுத்துள்ளார் என  மட்டுப்படுத்தப்பட்ட கல்முனைக் கரையோர மாவட்ட மீனவக் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்; தலைவர் எம்.ஜீ.எம்.பகுர்தீன், நேற்றுத் (20) தெரிவித்தார்.

நுழைவாயிலிலுள்ள கடல் மணலை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய, ஒலுவில் துறைமுகத்தை கடந்த வாரம் அமைச்சர் வந்து பார்வையிட்டதுடன், இந்த மணலை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் வாக்குறுதியளித்திருந்தார்.

எதிர்காலத்தில் இவ்வாறான பிரச்சினை ஏற்படாத வகையில், நடவடிக்கை எடுப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடற்றொழில் அமைச்சர் உள்ளிட்டோருடன் கலந்துரையாடுவதாகவும் அமைச்சர் கூறியிருந்தார்.  

மேற்படி நுழைவாயில்; கடல் மண்ணால்; மூடப்பட்டுள்ளதால், மூன்று மாத காலமாக மீனவர்கள் தங்களின் படகுகளை கடலுக்குக் கொண்டு செல்வதற்கும் கடலிலிருந்து துறைமுக தரிப்பிடத்துக்கு கொண்டு வருவதற்கும் சிரமத்தை எதிர்நோக்கினர்.

இதன் காரணமாக சுமார் 5 ஆயிரம் மீனவக் குடும்பங்கள் தங்களின் தொழிலை இழந்து, பொருளாதார ரீதியாக கஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளனர் எனவும் அவர் கூறினார்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X