2025 மே 15, வியாழக்கிழமை

கடமை நேரத்தில் அரச ஊழியர் கட்சி வேலையென முறைப்பாடு

Editorial   / 2020 ஜூலை 15 , பி.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எம். இர்ஷாத்

தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்புச் சபையின் அக்கரைப்பற்று திட்டக் காரியாலயத்தில் பணி புரிகின்ற ஒருவர், காலையில் கடமைக்குச் சென்று ஒப்பமிட்டு விட்டு, அவர் ஆதரவு அளிக்கின்ற கட்சியொன்றின் பணிக்காகச் செல்கிறார் என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையாளருக்குக் கிடைத்த இந்த முறைப்பாட்டைத் தொடர்ந்து உடனடியாக அங்கு விரைந்த தேர்தல் ஆணைக்குழுவினர், காரியாலயத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இதன்போது, அவர் காரியாலயத்தில் இல்லையெனத் தெரிய வந்துள்ளதையடுத்து, அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கா, தேர்தல் ஆணைக்குழு உயர் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .