Freelancer / 2023 ஜனவரி 12 , மு.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.என்.எம் அப்ராஸ்
சுற்று சூழலை சுத்தமாக வைத்திருக்கும் முகமாக ‘ஜிசேர்ப்’ (GCERF) நிறுவனத்தின் நிதியுதவியுடன் ஹெல்விடாஸ் (HELVETAS) அனுசரணையில், சமாதானமும் சமூக பணி (PCA) நிறுவனத்தால் அம்பாறை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வை-சென்ச் (y-change) திட்டத்தின் கீழ் உள்ள கல்முனை பிரதேச இளைஞர் நல்லிணக்க குழுக்களின் உறுப்பினர்கள் ஒன்றினைந்து, கல்முனை மாநகர சபையின் ஒத்துழைப்புடன் கல்முனை கடற்கரை பகுதியில் சிரமதான பணி நேற்று (11) முன்னெடுக்கப்பட்டது.
சமாதான தொண்டர்களான ரி. டிலக்சினி, எம்.எஸ் றக்சானா, டி. சாலினி, எம்.எம்.எம் அஹ்னாப் ஆகியோரின் வழிகாட்டலில் கல்முனை பிரதேச இளைஞர் நல்லிணக்ககுழுவின் தலைவர் எம்.என்.எம் அப்ராஸ், எஸ். டினோசா ஆகியோரின் தலைமையில் இச்சிரமதானம் இடம்பெற்றதுடன், இதன் போது ‘வை-சேன்ச்’ திட்டத்தின் திட்ட இணைப்பாளர் ஐ. சுதாவாசன், நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர்கள் கே.டி ரோகிணி, எம்.எல்.ஏ மாஜீத்,ஆகியோர் கலந்து கொண்டனர்.

1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago