Editorial / 2021 நவம்பர் 21 , மு.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்
காட்டு யானையொன்று மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்தமை தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பிரதேசத்தில் மல்வத்தை, புத்தங்கல காட்டுப் பகுதியில், காட்டு யானையொன்று, கடந்த வெள்ளிக்கிழமை(19) இறந்திருந்தது.
இநதக் காட்டு யானை மின் கம்பி வேலியில் அகப்பட்டே இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டிருந்தது.
இவ்விடயம் தொடர்பில் தற்போது வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும், சம்மாந்துறை பொலிஸார் இணைந்து, இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைக்காலமாக இப்பகுதிகளில் நூற்றுக்கணக்கான யானைகள் வருகை தந்த வண்ணம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
21 Dec 2025