Freelancer / 2022 ஜூலை 17 , மு.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
நூருல் ஹுதா உமர்
காரைதீவு பிரதேசத்தை சேர்ந்த கரைவலை மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான வேலை திட்டங்கள் குறித்து கல்முனை - அம்பாறை மாவட்ட சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கங்களின் சமாசம் ஆராய்ந்து வருகின்றது.
நெதர்லாந்து நாட்டின் மனித நேய கூட்டுறவு சங்கத்தின் நிதி பங்களிப்பிலான ஐந்தாண்டு வேலை திட்டத்தின் கீழ் விவசாயம், வீட்டு தோட்டம், மீன்பிடி, நெசவு போன்றவை சார்ந்த சுய தொழில் முயற்சியாளர்களுக்கு சமாசம் ஆக்கமும், ஊக்கமும் வழங்குகின்றது.
காரைதீவு, நாவிதன்வெளி, கல்முனை வடக்கு, வீரமுனை, கோரக்கோயில், மல்வத்தை, மல்லிகைத்தீவு, பழைய வளத்தாப்பிட்டி, புதிய வளத்தாப்பிட்டி, அட்டப்பள்ளம், மாணிக்கமடு, திராய்க்கேணி போன்ற பிரதேசங்களில் பொருத்தமான வேலை திட்டங்கள் அடையாளம் காணப்பட்டு முன்னெடுக்கப்பட்ட வண்ணம் உள்ளன.
இதற்கு அமைய காரைதீவில் மீனவர் சிக்கன கூட்டுறவு சங்கம் ஒன்றை உருவாக்குவதற்கான பூர்வீக ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளன. (a)
5 minute ago
17 minute ago
27 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
17 minute ago
27 minute ago
5 hours ago