Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2017 ஜூன் 27 , பி.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு –பொத்துவில் கடலோரப் பாதை வழியாக கதிர்காமம் முருகன் கோவிலுக்குப் பாதயாத்திரை செல்வதற்காக எதிர்வரும் 15ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 2ஆம் திகதிவரை கூமுனை காட்டு வழிப்பாதை பாதை திறந்திருக்கும் என> உகந்தை முருகன் ஆலயத்தின் பிரதம வண்ணக்கர் திஸாநாயக்க சுது நிலமே தெரிவித்தார்.
வடக்கு> கிழக்கு மாகாணங்களின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கதிர்காமம் முருகன் கோவிலுக்குப் பாதயாத்திரை செல்வோர்> குறுந்தூர காட்டுப் பாதையைப் பயன்படுத்துவது உண்டு.
உகந்தை முருகன் கோவில் உற்சவம் மற்றும் யாத்திரிகர்களுக்கான ஏற்பாடு தொடர்பாக கடந்த 20ஆம் திகதி அம்பாறை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது> கூமுனை காட்டுப்பாதையைத் திறப்பதற்கான அனுமதி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதனால் வழங்கப்பட்டது எனவும் அவர் கூறினார்.
மேலும்> உகந்தை முருகன் கோவிலுக்குச் செல்வோர் வெற்றுப் பொலித்தீன் பைகள்> பிளாஸ்டிக் போத்தல்கள் போன்றவற்றைக் காடுகளில் வீசுவது தடைசெய்யப்பட்டுள்ளது.
மேலும் மதுபானத்தைக் கொண்டு செல்லுதல்> காடுகளுக்குத் தீ வைத்தல்> மரங்களை வெட்டுதல்> மிருகங்கள் மற்றும் பறவைகளை வேட்டையாடுதல்> புதைபொருள் தோண்டுதல் போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட முடியாது.
இவ்வாறான காரியங்களில் எவராவது ஈடுபட்டால்> வனபரிபாலனத் திணைக்கள அதிகாரிகளும் பொலிஸாரும் சம்பந்தப்பட்டோர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் அவர் கூறினார்.
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025