Suganthini Ratnam / 2017 மே 02 , மு.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
அம்பாறை, வாங்காமம் மலையடிக் குளத்தில் நீராடிய ஏறாவூரைச் சேர்ந்த செய்னுலாப்தீன் முஸ்தாக் அஹமட் (வயது 16) என்பவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
மே தின விடுமுறையில் திங்கட்கிழமை (1) தனது நண்பர்களுடன் சுற்றுலாச் சென்ற இச்சிறுவன், குளத்தில் நீராடிக்கொண்டிருந்தபோது திடீரென நீரில் மூழ்கியுள்ளார்.
இச்சிறுவனைக் காப்பாற்றுவதற்கு நண்பர்கள் முயற்சித்த போதும், அது கை கூடவில்லை.
குளத்தில் நீராடிய இவர்களில் எவருக்கும் முறையாக நீச்சல் தெரிந்திருக்கவில்லை என்று விசாரணையில் தெரியவந்துள்ளது எனவும் பொலிஸார் கூறினர்.
ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரியில் 11ஆம் ஆண்டில் இம்மாணவன் கல்வி கற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
56 minute ago
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
25 Jan 2026
25 Jan 2026