Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2016 ஜூன் 05 , மு.ப. 08:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
அம்பாறை, சவளக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவிதன்வெளிப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட இருவரை கல்முனை நீதவான் நீதிமன்ற பதில் நீதவானும் மாவட்ட பதில் நீதவானுமாகிய இ.ராமக்கமலன் இன்று ஞாயிற்றுக்கிழமை தலா 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் விடுவித்துள்ளார்.
மேலும், இவ்வழக்கு விசாரணை எதிர்வரும் 07ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபை தலைமை காரியாலய புலனாய்வு பிரிவினரும் சவளக்கடை பொலிஸாரும் இணைந்து நேற்று (04) சனிக்கிழமை மேற்கொண்ட திடீர் சோதனையின்போது சட்டவிரோதமாக தமது வீட்டுக்கு மின்சாரம் பெற்றுவந்த இவர்களை கைதுசெய்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago