Freelancer / 2023 பெப்ரவரி 02 , பி.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. விஜயரெத்தினம்
அம்பாறை மாவட்டத்தில் இனவன்செயல்கள் காரணமாக பாதிப்புகளை தொடர்ந்தும் எதிர்கொண்டு வருகின்ற தமிழ் கிராமங்களில், வாழ்வாதார மேம்பாட்டு திட்டங்களை, இவ்வருடத்தில் முன்னுரிமைப்படுத்தி மேற்கொள்வதற்கு, அம்பாறை மாவட்ட சிக்கன கடனுதவி கூட்டுறவு சங்க சமாசம் தீர்மானம் எடுத்துள்ளது.
சமாசத்தின் தலைவர் எஸ். லோகநாதன், இது தொடர்பாக புதன்கிழமை (01) ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்ததாவது; இம்மாவட்டத்தில் இன வன்செயல்கள் காரணமாக தொடர்ந்தும் பல கிராமங்கள், பல வடிவங்களில் பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றன.
இவற்றை அடையாளம் கண்டு, எமது வேலை திட்டங்களில் முன்னிலைப்படுத்த தீர்மானித்து உள்ளோம். இங்கு வாழ்வாதார மேம்பாட்டு திட்டங்களை முன்னெடுப்பதற்கு, புலம்பெயர்
தமிழ் செயற்பாட்டாளர்கள் உதவி, ஒத்தாசை வழங்க முன்வந்துள்ளார்கள் எனக்குறிப்பிட்டார். R
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago