2025 மே 02, வெள்ளிக்கிழமை

திருத்த வேலை காரணமாக மின்வெட்டு

Suganthini Ratnam   / 2017 மே 04 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறையில்; அவசரத் திருத்த வேலை காரணமாக 3 நாட்களுக்கு மின்வெட்டு மேற்கொள்ளப்படும் என இலங்கை மின்சார சபையின் அம்பாறைப் பிராந்திய மின் பொறியியலாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

அக்கரைப்பற்றில் நாளை 5ஆம் திகதி காலை 8.30 மணி முதல் மாலை 5 மணிவரை மின்வெட்டு மேற்கொள்ளப்படும்.
தீகவாபி, இறக்காமம், அம்பாறை, பாலமுகாம், உதயகிரிய, அக்கரைப்பற்று, இசங்கேணிசீமை ஆகிய பகுதிகளில்; நாளை மறுதினம் 8.30 மணி முதல் மாலை 5 மணிவரை மின்வெட்டு மேற்கொள்ளப்படும். கல்முனையில் சாஹிராக் கல்லூரி வீதி, மாலிஹா வீதி, ஒறபிபாஷா வீதி, புதிய வீதி ஆகியவற்றில் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்வெட்டு மேற்கொள்ளப்படும்.

இசங்கேணிசீமையில் எதிர்வரும் 7ஆம் திகதி காலை 8.30 மணி முதல்; மாலை 5 மணிவரையும் அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரையும் மின்வெட்டு மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .