2025 ஜூன் 30, திங்கட்கிழமை

நோயாளர்களைப் பார்வையிடுதல்; இன்று முதல் நேரமாற்றம்

Editorial   / 2020 ஜனவரி 01 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளர்களை, பொதுமக்கள் பார்வையிடும் நேரத்தில் இன்று (01) முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதனடிப்படையில், மாலை 04 மணிமுதல் 05 மணி வரையாக இருந்த பார்வையிடும் நேரம், மாலை 05 மணிமுதல் 06 மணி வரை என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, காலை 06 மணி முதல் 07 மணி வரை நண்பகல் 12 முதல் 01 மணிவரையான நேரங்கள் மாற்றத்துக்கு உட்படவில்லை. அந்நேரங்களில் வழமைபோன்றே பொதுமக்கள், நோயாளர்களைப் பார்வையிட முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X