Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2017 ஏப்ரல் 07 , மு.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
பண மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மூன்றாவது நபரை, எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ. பயாஸ் றஸாக், நேற்று (06) உத்தரவிட்டார்.
அம்பாறை, சவளக்கடை 15ஆம் கொலனி பிரதேசத்தில் வசித்து வரும் பெண் ஒருவரிடம் வீடமைப்பு அதிகார சபையினால் தங்களுக்கு வீடு வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதென தொலைபேசி ஊடாக தெரிவித்தே அவர் மோசடி செய்துள்ளார்.
முற்கொடுப்பனவாக 15 ஆயிரம் ரூபாய் பணத்தினை காசுக் கட்டளையாக அனுப்பிவைக்குமாறு அவர் கூறியதையடுத்து, குறித்த பெண் அவர்கள் வழங்கிய பெயர் விலாசத்துக்கு 15 ஆயிரம் ரூபாய் பணத்தை அனுப்பி வைத்துள்ளார்.
மீண்டும் அதே தொலைபேசி ஊடாக இப் பணம் போதாது மீண்டும் 15 ஆயிரம் ரூபாய் பணம் உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.
அப்பெண் மீண்டும் பணம் குறித்த முகவரிக்கு அனுப்பி வைத்துள்ளார். பின்னர் எவ்வித தகவலும் கிடைக்காததையிட்டு குறித்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்ட போது அவ்விலக்கம் துண்டிக்கப்பட்டதை அறிந்த பெண், சவளக்கடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். இதனையடுத்தே அந்த நபர் கைதுசெய்யப்பட்டார்.
இச் சம்பவத்துடன் தொடர்புடைய பெண் ஒருவரும், ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
12 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
2 hours ago
4 hours ago