Princiya Dixci / 2020 நவம்பர் 05 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதையடுத்து, மாட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களின் உத்தியோகத்தர்களின் வரவுகள் 50 சதவீதமாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதோடு, சுழற்சி முறையில் உத்தியோகத்தர்கள் வரவழைக்கப்பட்டு, பொதுமக்களுக்கான அத்தியவசிய சேவைகள் வழங்கப்பட்டு வருவதாக, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஏ.எம். அப்துல் லத்தீப், இன்று (05) தெரிவித்தார்.
அசாதாரண சூழ்நிலையில் பொதுமக்களுக்கான சேவைகளை பாதுகாப்பான முறையில் அவர்களின் காலடிக்குக் கொண்டு சேர்க்கும் பணியை, பிரதேச செயலகம் முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
சில பிரதேச செயலகங்களின் சேவைகளை பொதுமக்கள் தொலைபேசி ஊடாக பெற்றுக் கொள்வதற்கான வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் கூறினார்.
22 Jan 2026
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Jan 2026
22 Jan 2026