எம்.எஸ்.எம். ஹனீபா / 2017 ஜூன் 02 , பி.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, மத்தியமுகாம் 11ஆம் கொலனி பிரதேசத்தில் மகளை அடித்துக் கொலை செய்தார் என்று கூறப்படும் தாயாரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ. பயாஸ் றஸாக், இன்று (02) உத்தரவிட்டார்.
கடந்த 2016ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தாய்க்கும் மகளுக்கும் இடையில் மதம் மாறியமை தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தைத் தொடர்ந்து, தாய் கட்டில் பலகையால், மகள் மீது தாக்கியுள்ளார். இந்நிலையில் சம்பவ இடத்தில் உயிரிழந்த மகளின் சடலத்தை வீட்டின் பின்புறத்தில் கிடங்கு வெட்டி தாய் புதைத்துள்ளார் என, விசாரணையிலிருந்து தெரியவந்தது.
தனது வளர்ப்பு மகளான செல்வநாயகம் ஜனனி (வயது 21) என்பவரை அடித்துக் கொலை செய்துவிட்டு, சடலத்தை புதைத்த சம்பவத்தை தொடர்ந்து, சந்தேகத்தின் பேரில் தாயார் (வயது 55) கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026