Janu / 2026 மே 04 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
டிக்கோயா, புளியாவத்தை பகுதியில் கழிவு தேயிலை ஏற்றி சென்ற பார ஊர்தி (லொறி) ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி பலத்த காயமடைந்த சம்பவம் திங்கட்கிழமை (04) முற்பகல் இடம்பெற்றுள்ளது.
கழிவு தேயிலையை ஏற்றிக்கொண்டு பயணித்த குறித்த லொறி, புளியாவத்தை பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் பார ஊர்தியின் சாரதி படுகாயமடைந்த நிலையில், அங்கிருந்தவர்களால் உடனடியாக மீட்கப்பட்டு டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை ஹட்டன் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
செ.தி.பெருமாள்

10 minute ago
24 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
24 minute ago
41 minute ago