2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

மாற்றுத் திறனாளிகள் மகஜர் கையளிப்பு

Editorial   / 2021 டிசெம்பர் 09 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக்

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, கல்முனை பிரதேச மட்ட வலது குறைந்தோர் அமைப்பின் ஏற்பாட்டில், கல்முனை பிரதேச செயலக முன்றலில், விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்று, நேற்று (08) நடைபெற்றது.

இதில்  மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சமூகத்தில் மாற்றுத் திறனுக்ககான தேசிய செயற்பாட்டுத் திட்டத்தை அமுல்படுத்துமாறு வலியுறுத்தி, பதாகைகளை ஏந்தியவாறு  குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது.

மேலும், இந்த விழிப்புணர்வில் கலந்துகொண்டவர்கள், கல்முனை பிரதேச செயலாளர்  ஜே. லியாகத் அலியிடம்  மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகள் அடங்கிய  மகஜரைக் கையளித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X