Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Niroshini / 2017 ஏப்ரல் 29 , மு.ப. 08:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கண்டியில் நடைபெறவுள்ள ஸ்ரீ சுதந்திரக் கட்சியின் மே தின பேரணியில் கலந்துகொள்வதற்காக அம்பாறை மாவட்டத்திலிருந்து இம்முறை சுமார் 05 ஆயிரம் பேர் கலந்துகொள்ளவுள்ளதாக, அம்பாறை மாவட்ட ஸ்ரீ சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவின் பொருளாளரும் அக்கரைப்பற்று பிரதேச அமைப்பாளருமான ஐ.எச்.ஏ. வஹாப், இன்று தெரிவித்தார்.
பொத்துவில், கல்முனை, சம்மாந்துறை மற்றும் அம்பாறை ஆகிய தேர்தல் தொகுதிகலிருந்து ஸ்ரீ சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம் மற்றும் பேரணிகளில் கலந்துகொள்வதற்கு இம்முறை கூடுதலான முஸ்லிம், தமிழ் இளைஞர், யுவதிகள் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மே தின பேரணியில் கலந்துகொள்பவர்கள் செல்வதற்காக விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மாவட்ட மற்றும் பிரதேச ஸ்ரீ சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அக்கரைப்பற்று பிரதேச அமைப்பாளர் ஐ.எச்.ஏ. வஹாப் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
46 minute ago
51 minute ago