Super User / 2011 ஜனவரி 10 , பி.ப. 03:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(அப்துல் அஸீஸ்)
அம்பாறை மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலையைக் கண்டறிவதற்காக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையிலான குழு இன்று அம்பறை மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.
திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால் காசீம் ஆகியோர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களையும், பிரதேசங்களையும் பார்வையிடுவதற்காக அமைச்சர் தலைமையிலான குழு இன்று அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களுக்கும் விஜயம் செய்தனர்.
இதில் அமைச்சின் செயலாளர்கள், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கண்ணங்கரா உட்பட பிரதேச செயலாளர்கள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளூராட்சி சபை தலைவர்கள் பொது நிறுவனங்களின் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இறக்காமம், நிந்தவூர், சாய்ந்தமருது, கல்முனை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளிள் உள்ள முகாம்களுக்கு விஜயம் செய்த அமைச்சர் அங்குள்ள மக்களோடு கலந்தாலேசனைகளை நடத்தியதுடன் அவர்களின் தேவைகளையும் கேட்டறிந்து கொண்டார்.
.jpg)
.jpg)
25 minute ago
36 minute ago
40 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
36 minute ago
40 minute ago
52 minute ago