2025 ஜூன் 09, திங்கட்கிழமை

வாகன விபத்தில் ஒருவர் படுகாயம்

Super User   / 2011 மார்ச் 21 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட பாலமுனை பிரதான வீதியில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் படுகாயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பஸ் வண்டியொன்றின் பின்புறத்தில் மோதி தூக்கியெறியப்பட்ட மோட்டார் சைக்கிளொன்றின் மீது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியதையடுத்து மேற்படி விபத்து இடம்பெற்றதாக சம்பவத்தை நேரில் கண்டோர் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் எதிரே வந்த நபர் விபத்துக்குள்ளான போதும், ஆபத்துகள் இன்றி சிறிய காயங்களுடன் தப்பியுள்ளார்.

இவ்விபத்துத் தொடர்பான விசாரணைளை அக்கரைப்பற்றுப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .