2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

கௌரவிப்பு நிகழ்வும் நுளம்புவலை வழங்கலும்

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 11 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)


தேசிய சுகாதார வாரத்தை முன்னிட்டு தேசிய ஐக்கிய ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தால், ஊடகவியலாளர்களுக்கு நுளம்புவலை வழங்கலும் சமூக சேவையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வும் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

அட்டாளைச்சேனை எம்.பி.சீ.எஸ் மண்டபத்தில் தேசிய ஐக்கிய ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.எம்.அறூஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி டாக்டர் முஹம்மட் இஸ்மாயீல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டுவருகின்ற அம்பாறை மாவட்ட சிவில் பாதுகாப்பு பிரிவின் கேணல் சரத் தென்னக்கோன், அதிபர் எம்.ஐ.எம்.றியாஸ், சர்வோதய மாவட்ட இணைப்பாளர் எம்.எம்.பைஸால் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X