2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

சிறுமியை வல்லுறவுக்குட்பட முயன்ற இளைஞர் கைது

Super User   / 2013 ஜனவரி 10 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

அட்டாளைச்சேனை, திராய்க்கேணி பிரதேசத்தில் கடைக்கு சென்ற 17 வயது பாடசாலைச் சிறுமியை பலாத்தகாரமாக இழுத்துச் சென்று வல்லுறவுக்கு ஈடுபட முயன்ற 21 வயதுடைய இளைஞரை அக்கரைப்பற்று பொலிஸார் நேற்று புதன்கிழமை இரவு கைது செய்துள்ளனர்.

குறித்த சிறுமி தனது வீட்டுக்கு அண்மையில் உள்ள கடைக்கு சம்பவதினம் மாலை 6.30 மணிக்கு தேங்காய் எண்ணெய் வாங்குவதற்கு வீதியால் சென்றுகொண்டிருந்தபோது சிறிய ஒழுங்கையில் கறுத்தநிற ரீசேட்டுடன் தலையை மறைத்தவாறு பதுங்கி நின்ற கொண்டிருந்தவர் திடீரென வீதியால் வந்த சிறுமியின் வாயை பிடித்து பொத்தியவாறு ஒழுங்கைக்கு இழுத்துச்சென்று பாலியல் வல்லுறவுக்கு ஈடுபட முயன்றுள்ளார்.

இந்நிலையில் சிறுமி அவனிடம் இருந்து தப்பி வீட்டிற்குச் சென்று தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பெற்றோர் பொலிஸாரிடம் செய்த முறைப்பாட்டையடுத்து குறித் இளைஞரை பொலிஸார் நேற்று இரவு 8 மணிக்கு கைது செய்துள்ளனர்.

இச்சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டவர் ஒலுவில் இரண்டாம் பிரிவு பாடசாலை வீதியைச் சேர்ந்தவர் எனவும் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0

  • aboozamil Friday, 18 January 2013 08:56 PM

    6.30க்கு போனது குற்றம் (தனியாஹ)

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X