2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

நீராட சென்ற நிலையில் காணாமல்போன ஆசிரியர் சடலமாக மீட்பு

Kogilavani   / 2013 ஜனவரி 11 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.ஜே.எம்.ஹனீபா
 
அம்பாறை, அட்டப்பள்ளம் சிங்காரபுரி ஆற்றில் நீராட சென்ற நிலையில் காணாமல்போன ஆசிரியர் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கல்முனை பாண்டிருப்பை சேர்ந்த வெள்ளக்குட்டி கனகரத்தினம் வயது (48) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நிந்தவூர் அட்டப்பள்ளம் முஸலிம் வித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கும்  மேற்படி ஆசிரியர், நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் பாடசாலையிலிருந்து அட்டாளைச் சேனை திராய்க்கேணி கிராமத்திலுள்ள தனது சகோதரரின் வீட்டுக்கு செல்லும் வழியில் அட்டப்பள்ளம் சிங்காரபுரி ஆற்றில் நீராடிய போது வெள்ளநீரினால் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து சம்மாந்துறைப் பொலிஸாரும் உறவினர்களும் தேடுதல் நடத்தி வந்த நிலையில் ஆற்றில் சற்று தொலைவிலிருந்து நேற்று மாலை சடலமாக மீடகப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X