2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற அறுவர் கைது

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 07 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன் 

சட்டவிரோதமாக மின்சாரம் பெற்று வந்ததாகக் கூறப்படும் 6  பேரை கைதுசெய்துள்ளதுடன், சட்டவிரோத மின்சாரம் பெறுவதற்காக பயன்படுத்திய வயர்களையும் கைப்பற்றியுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பாறை மின்சார சபையினரும் திருக்கோவில் பொலிஸாரும் இணைந்து நேற்று புதன்கிழமை இரவு 10.30 மணியளவில் திருக்கோவில், கள்ளியம்தீவு பிரதேசங்களில் சோதனை மேற்கொண்டனர். இதன்போது சட்டவிரோதமாக மின்சாரம் பெற்று வந்ததாகக் கூறப்படும் 6  பேரையும் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .