2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

ஆரோக்கியமான தேசத்துக்காக அனைவரும் ஒன்றிணைவோம்

R.Tharaniya   / 2025 ஜூன் 01 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச சமூகம் நமது சமூகத்தில் கண்ணுக்குத் தெரியாத அல்லது குறிப்பிடத்தக்க நிகழ்வுகளைக் கொண்டாட ஆண்டு முழுவதும் நாட்களை ஒதுக்கியுள்ளது.

அதன்படி, சமூகத்தில் மிகவும் ஆபத்தான சூழ்நிலையாக மாறியுள்ள புகையிலை பயன்பாட்டிற்கு எதிராக உலகளவில் குரல் எழுப்பும் நாள் மே.31 ஆம் திகதியாகும்.

இந்த உலக புகையிலை எதிர்ப்பு தினம் உலக சுகாதார அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வருடாந்திர கொண்டாட்டத்தின் நோக்கம், புகையிலை பயன்பாட்டின் ஆபத்துகள், புகையிலை நிறுவனங்களின் வணிக நடைமுறைகள், புகையிலை பயன்பாட்டை எதிர்த்துப் போராடுவதற்கான உலக சுகாதார அமைப்பின் பணிகள் மற்றும் உலகெங்கிலும் உள்ள மக்கள் தங்கள் உரிமைகளை அடைய என்ன செய்ய முடியும் என்பதாகும்.

அதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையை உருவாக்குதல் மற்றும் எதிர்கால சந்ததியினரைப் பாதுகாத்தல் ஆகியவற்றைப் பற்றி மக்களுக்குக் கற்பிப்பதாகும். 1987ஆம் ஆண்டில், 

உலக சுகாதார அமைப்பின் உறுப்பு நாடுகள் கூட்டாக இந்த உலக 
புகையிலை எதிர்ப்பு தினத்தை உருவாக்கியது, இது புகையிலை தொற்றுநோய் மற்றும் அது ஏற்படுத்தும் தடுக்கக்கூடிய இறப்புகள் மற்றும் நோய்கள் குறித்து உலகளாவிய கவனத்தை ஈர்க்கும்.

இந்த உலக புகையிலை எதிர்ப்பு தினம் உலக சுகாதார அமைப்பால் நியமிக்கப்பட்ட 11 அதிகாரப்பூர்வ உலகளாவிய பொது பிரச்சாரங்களில் ஒன்றாகும்.

இந்த புகையிலை தொடர்பான பொருட்களின் பயன்பாடு காரணமாக ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் கிட்டத்தட்ட 8 மில்லியன் உயிர்கள் இழக்கப்படுகின்றன.

கூடுதலாக, பயன்படுத்தாத ஆனால் பாதிக்கப்படும் சுமார் 1.2 மில்லியன் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் இறக்கின்றனர். இந்த துயரமான சூழ்நிலைக்குப் பதிலளிக்கும் விதமாக, உலக புகையிலை எதிர்ப்பு தினம் 1987 இல் நிறுவப்பட்டது. 

சாதாரண மக்களாகிய நாம் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டு இதற்கான திட்டங்களை ஒழுங்கமைப்பது மிகவும் முக்கியம். இதில் மிகுந்த கவனம் செலுத்துவது அரசாங்க நிர்வாகத்தின் பொறுப்பாகும். 

விலைகளை அதிகரிப்பதன் ஊடாக, புகைத்தலைக் கட்டுப்படுத்த முடியும் என்பதே பெரும்பாலானவர்களின் எதிர்பார்ப்பாகும். 

சர்வதேச கொண்டாட்டத்திற்காக ஒரு ஒருங்கிணைந்த நாள் ஒதுக்கப்பட்டிருந்தாலும், இதுபோன்ற சிறப்பு நிகழ்வுகளில் தொடர்ந்து .

கவனம் செலுத்துவது நம் அனைவரின் கடமையும் பொறுப்பும் ஆகும். ஆரோக்கியமான தேசத்தையும் உலகத்தையும் கட்டியெழுப்ப நாம் அனைவரும் ஒன்றிணைந்து 
பாடுபடுவோம்.

எனினும், புகைப்பொருட்களை விற்பனை அதிகரித்துள்ளதாகவே அறியமுடிகின்றது. ஆக, புது முகங்களும் புகையிலை சுவைத்துப் பார்க்க ஆசைப்பட்டுள்ளனர்.

அல்லது அடிமையாகி விட்டனர் என்றே கூறவேண்டும். அவ்வாறானவர்களை அதிலிருந்து விரைவில் மீட்டெடுக்கவேண்டும். அத்துடன், பாடசாலை மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை துரிதப்படத்த வேண்டும்.

30.05.2025


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X