R.Tharaniya / 2025 ஏப்ரல் 30 , பி.ப. 12:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
காஷ்மீரில் நிலவும் அமைதியின்மை இந்தியாவிற்கு மட்டுமல்ல, இந்தப் பிராந்தியத்திற்கும் ஒரு பிரச்சினையாகும். பஹேல்காமில் 22ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடந்த இரத்தக்களரியில், 26 சுற்றுலாப் பயணிகள் பலியாகினர்.
இந்ததுப்பாக்கிச் சூடு, 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு காஷ்மீரில் நடந்த மிக மோசமான பயங்கரவாதத் தாக்குதலாக வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.
இந்த பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் வீரர்களோ அல்லது அரசு அதிகாரிகளோ அல்ல, இந்தியாவின் மிக அழகான பள்ளத்தாக்குகளில் ஒன்றில் விடுமுறைக்குச் சென்ற பொதுமக்களே பலியெடுக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, இந்தியாவும் பதிலுக்கு. பாகிஸ்தானும், அதிரடியான தீர்மானங்களை எடுத்துள்ளன.
இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக இந்தியா கூறுகிறது. எனவே, பாகிஸ்தானுக்கு ஒரு உறுதியான பாடம் கற்பிக்க மோடி அரசாங்கம் உடனடியாக தயாராகி வருகிறது. ஆனால், இந்திய-பாகிஸ்தான் போர் என்பது முற்றிலும் பொருத்தமானதல்ல.
அந்தப் பிராந்தியமே நிலையற்றதாக மாறும்போது, அது இலங்கைத் தீவையும் பாதிக்கிறது. பயங்கரவாதிகளுக்குத் தகுந்த பதில்கள் வழங்கப்பட வேண்டும் என்றாலும், இரண்டு அணு ஆயுத நாடுகளுக்கு இடையிலான போர் முழு உலகிலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்தத் தாக்குதலுக்கு ‘வலுவான பதிலடி’ அளிப்பதாக இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உறுதியளித்துள்ளார்,
இந்திய இராணுவம் விரைவில் பாகிஸ்தானுக்குள் ஊடுருவும் என்றும், அதனைத் தவிர்க்க முடியாது என்றும் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் தெரிவித்துள்ளார். ஆகையால், எப்போது வேண்டுமானாலும் இரு நாடுகளுக்கு இடையிலும் போர் ஏற்படும் அபாயம் உள்ளது.
இந்த நேரத்தில் உலகில் இரண்டு தீவிரப் போர்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் தொடங்கி ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது. இதனால் ஏற்படும் உயிர்களுக்கும் சொத்துக்களுக்கும் ஏற்படும் சேதம் மிகப்பெரியது.
அதேபோல், இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையிலான மோதலும் சிறிது நேரம் எடுத்து ஆயிரக்கணக்கான உயிர்களைக் கொன்றது. இந்த இரண்டு போர்களிலும், ஏராளமான மதிப்புமிக்க வீடுகளும் பல மாடிக் கட்டிடங்களும் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.
இறந்தவர்களை விட, காயமடைந்தவர்களும், இறந்தவர்களைச் சார்ந்திருப்பவர்களும், அல்லது குழந்தைகள் மற்றும் பெண்களும் தான் போரின் விளைவுகளை அதிகம் அனுபவிக்கிறார்கள்.
இத்தகைய கசப்பான விளைவுகளை அனுபவித்து வரும் உலக மக்களுக்கு இன்னொரு போர் தேவையில்லை. போரின் இடிபாடுகளைப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. ஆகையால், மிகச்சரியாக சிந்தித்து தீர்மானங்களை எடுக்கவேண்டிய பொறுப்பு, இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் கைகளிலேயே உள்ளது. இதனைதான் உலக நாடுகள் பல வலியுறுத்தியுள்ளன.
4 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago