2025 மே 01, வியாழக்கிழமை

டெங்கொழிப்புக்கு மக்கள் அர்ப்பணிக்க வேண்டும்

R.Tharaniya   / 2025 ஏப்ரல் 27 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.  15ஆவது வாரத்தில், 

23 மாவட்டங்களில் டெங்கு நோயாளிகள் 1,178 பேர்  பதிவாகியுள்ளனர், 14ஆவது வாரத்தில் 25 மாவட்டங்களில் 990 பேர் பதிவாகியுள்ளனர். முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது, 15ஆவது வாரத்தில் 
19.0 சதவீத அதிகரிப்பு உள்ளது.

41.7 சதவீதமானோர் மேற்கு மாகாணத்தில்,  கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியில், 7.4 சதவீதமானோரும் கொழும்பு மாவட்டம் - 16.3 சதவீதமானோரும், கம்பஹா மாவட்டத்தில் 13.2 சதவீதமானோரும் மற்றும் களுத்துறை மாவட்டத்தில் 4.8 சதவீதமானோரும், இரத்தினபுரி மாவட்டத்தில்  16.3 சதவீதமானோரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 6.6 சதவீதமானோரும், மொனராகலை மாவட்டத்தில் 5.2 சதவீதமானோரும், கண்டி மாவட்டத்தில் 5.1 சதவீதமானோரும், மாத்தறை மாவட்டத்தில்  3.3 சதவீதமானோரும்,  காலி மாவட்டத்தில் 3.2 சதவீதமானோரும் பதிவாகியுள்ளனர்.

டெங்கு பரவுவதைத் தடுக்கும் முக்கிய பொறுப்பு பொதுமக்களிடமே உள்ளது என்பதை நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். டெங்குவைப் பரப்பும் கொசுக்களின் இனப்பெருக்கத்தைத் தடுப்பதே நோய் பரவுவதைத் தடுப்பதற்கான முக்கிய செயல்முறையாகும். 

இந்த செயல்முறையை வெற்றிகரமாக தொடங்க, நாம் வாழும் சூழலையும், நமது பணியிடங்களையும் கொசுக்கள் இல்லாத மண்டலங்களாக மாற்றுவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். உங்கள் வீட்டைச் சுற்றி கொசுக்கள் பெருகுவதற்கு வழிவகுக்கும் நீர் தேங்கி நிற்கும் பகுதிகளை அகற்றுவது முக்கியம். 

இருப்பினும், நம்மிடையே தாங்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் தயிர் கோப்பைகளை மட்டுமல்ல, போத்தல்களின் மூடிகளைக் கூட சுற்றியுள்ள சூழலுக்குள் அலட்சியமாக வீசும் மக்கள் இருக்கும் வரை இந்தப் பணியை வெற்றிகரமாக நிறைவேற்ற முடியாது. உங்கள் வீட்டு உறுப்பினர்களில் ஒருவருக்கு டெங்கு தொற்று ஏற்பட்டால் மட்டுமே சுற்றுச்சூழலை சுத்தம் செய்வதில் ஆர்வம் காட்டுவதில் அர்த்தமில்லை.

டெங்கு நம் நாட்டிற்கு அந்நியமான ஒரு நோய் அல்ல. ஒவ்வொரு ஆண்டும், டெங்கு பரவுதல் அதிகரிக்கும் பல காலகட்டங்களை நாம் சந்திக்கிறோம். மருத்துவ அறிக்கைகளும் புள்ளிவிவரங்களும் மழைக்காலம் பெரும்பாலும் மிகவும் ஆபத்தானது என்பதைக் காட்டுகின்றன. இவ்வளவு நீண்ட மழைக்காலத்திற்குப் பிறகு தீவின் பல பகுதிகளில் நிலவும் வறண்ட வானிலை இதுவாகும்.

அத்தகைய காலகட்டத்தில் கூட, டெங்கு நோய் பரவினால், நாட்டில் உள்ள அனைவரின் கவனத்தையும் செலுத்த வேண்டியது அவசியம்.
தீவு முழுவதும் டெங்கு நோய் கட்டுப்பாடு மற்றும் ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கான துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பைத் திட்டமிடுதல் மற்றும் ஒருங்கிணைத்தல் பொறுப்பு தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், அந்தப் பொறுப்பை அந்த நிறுவனத்திடம் ஒப்படைத்து, அவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளைப் பின்பற்றாமல் அலட்சியமாகச் செயல்படும் நபர்கள் இருக்கும் வரை, நோய் பரவுவதைத் தடுக்க முடியாது. அந்த நோக்கத்திற்காக மக்கள் தாங்களும் சில அர்ப்பணிப்புகளைச் செய்ய வேண்டும் என்று உணர வேண்டியது அவசியம்.

25.04.2025


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .