Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
R.Tharaniya / 2025 ஜூன் 10 , பி.ப. 01:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்கால குடிமக்களை உருவாக்கும் ஒரு பாடசாலை, அதன் மாணவர்களுக்கு அறிவையும் திறமையையும் வழங்குவதோடு மட்டுமல்லாமல், சமூகத்தில் ஒழுக்கமான வாழ்க்கை வாழத் தேவையான மனப்பான்மைகளும் மதிப்புகளும் வளர்க்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
பாடசாலை மாணவர்களுக்கு எதிரான பல்வேறு வகையான வன்முறைகளுக்கு, அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் மீது பெற்றோர்கள் சட்ட நடவடிக்கை எடுத்த பல சம்பவங்கள் உள்ளன. எனினும், தண்டனை வழங்கக் கூடிய சம்பவங்கள் இன்னும் இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.
உலகில் சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரித்து வருவதால், சிறுவர் பாதுகாப்பு மற்றும் குழந்தை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் விரிவடைந்து வருகின்றன.
எனவே, பாடசாலைக்கு உள்ளேயும் வெளியேயும் குழந்தைகள் இதுபோன்ற சூழ்நிலைகளுக்கு ஆளாக அனுமதிக்கப்படக்கூடாது. ஒரு சில ஆசிரியர்கள், அதிபர்களால், மாணவர்கள், மாணவிகள் துன்புறுத்தப்பட்ட சம்பவங்களும் இடம்பெறாமல் இல்லை.
பல்வேறு காரணங்களுக்காக மாணவர்கள் பாடசாலையில் உடல் ரீதியாக தண்டிக்கப்படுகின்றனர். மாணவர்கள், தங்கள் பெற்றோரிடம் அதைப் பற்றிச் சொல்லத் தயங்கிய காலம் இருந்தது. ஏனெனில் அவர்கள் வீட்டிலும் தண்டிக்கப்படுவார்கள் என்ற அச்சம் அவர்களுக்கு இருந்தது. எனினும்,
நிலைமை மாறி, பொலிஸ், மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியவற்றில் முறைப்பாடுகள் செய்யப்படுகின்றன.
வீட்டுப்பாடம் செய்யவில்லை எனக் குற்றஞ்சாட்டிய விஞ்ஞான பாட ஆசிரியர், மாணவியின் தாடை உடையும் வரையில் தாக்கியுள்ள சம்பவம், நுவரெலியா-தலவாக்கலை பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் இடம்பெற்றுள்ளது.
அந்த ஆசிரியர், தண்டனை பெற்று,
இந்தப் பாடசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. காயங்களை ஏற்படுத்தும் வகையில் தண்டிக்க முடியாது. இதேவேளை, தனக்கு அறிவிக்காமல், விளையாட்டு நிகழ்வுக்குச் சென்றார் என்று குற்றஞ்சாட்டி, யாழ்ப்பாணத்தில் மாணவனை திட்டியதால், அந்த மாணவன், தவறான முடிவை எடுத்துள்ளார். தன்னுயிரை மாய்க்க முயற்சி செய்துள்ளார்.
அது அந்த மாணவனின் விளங்கிக் கொள்ளாத தனமாகும், பாடசாலைக்குள் மாணவன் நுழைந்துவிட்டால், பாடசாலை நிர்வாகமே முழுமையாகப் பொறுப்பு கூறவேண்டும்.ஒரு சில ஆசிரியர்கள், உரிமையைக் கையிலெடுப்பதன் ஊடாக, இவ்வாறான தேவையில்லாத சம்பவங்கள் இடம்பெறுகின்றன. பிள்ளைகளை நல்வழிப்படுத்த வேண்டும்
என்பதில் ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது. அதை யாராலும் மறக்க முடியாது. எனினும், சில ஆசிரியர்கள் மனித உரிமையை மீறும் வகையில் மாணவர்களைத் தண்டித்த விடுகின்றனர்.
ஆசிரியர்களால் வழங்கப்படும் தண்டனையை மாணவர்கள் சில நேரங்களில் அந்த தவறை புரிந்து கொள்ளமாட்டார்கள். அது மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
“15 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களை அன்பான மற்றும் கனிவான விளக்கங்கள் மூலம் சரியான பாதையில் வழிநடத்த முடியும் பாடசாலையில் தண்டிக்கப் படாவிட்டால், அவர்கள் சமூகத்திற்குச் செல்லும் போது கூட தவறுகளைச் செய்வார்கள் என்பது உண்மையாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
43 minute ago
3 hours ago
4 hours ago