Janu / 2024 செப்டெம்பர் 26 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனநாயகம் விலை உயர்ந்தது. அதைப் பெறுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சி அளப்பரியது. தெருவில் இருந்து எடுக்க முடியாது என்பதுடன் புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவி பிரமாணம் செய்து கொண்டதில் இருந்து இந்த நாட்டுக்கு புதிய பாதை திறக்கும். ஒட்டுமொத்த இலங்கை சமூகத்திற்கும் இது செல்லுபடியாகும்.
இறுதி வெற்றியாளர் நாட்டு மக்களாக இருக்க வேண்டும். மக்கள் சம்மதம் தெரிவித்து ஒரு நாடு என்ற பொறுப்பை தலைவரிடம் கொடுத்திருக்கும் வரை மக்கள் ஒதுங்கி நிற்க முடியாது. நாற்காலி அரசியல் சகாப்தம் இப்போது முடிவுக்கு வர வேண்டும். நாட்டின் வெற்றிக்காக வாக்களித்த மக்கள் அதனையே எதிர்பார்க்கின்றனர்.
அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அவர் இந்த தேசத்தின் தலைவர் மட்டுமல்ல. இந்த நாடு நீண்ட காலமாக சுமந்து வந்த கடன் மலை இரண்டரை வருடங்களுக்கு முன் சரிந்தது. சலுகைகள் முதலியவற்றைக் கொடுத்து முடிவெடுத்ததன் விளைவு ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகுதான் உணரப்பட்டது.
இலங்கை இப்போது சர்வதேச நாணய நிதியத்தின் சட்ட கட்டமைப்பின் நடுவில் ஒரு படம் போல் உள்ளது. சில காலம் பொருளாதாரத்தில் இருந்து தலை தூக்கியது. இருப்பினும், சவாலான வேலை இங்கே தொடங்குகிறது. வரிச்சுமை குறித்து மக்களுக்கு இன்னும் பேசிக் கொண்டுதான் இருக்கின்றனர்.
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை பற்றி யோசிக்கின்றனர். ஊதியம் பெறுபோர், மாதத்தின் மீதமுள்ள மூன்று வாரங்கள் எப்படி செலவிடுவது என்று யோசிக்கின்றனர். அன்றாட கூலி வேலை செய்பவர்கள், சுயதொழில் செய்பவர்கள் போன்றவர்கள் இத்தகைய சுமையைத் தாங்கிக் கொண்டு வாழ்க்கைப் பயணத்தில் ஈடுபடுகிறார்கள்.
ஒரு நாட்டின் அனைத்துப் பிரச்சனைகளையும் ஒன்றாகத் தீர்க்க முடியாது. இந்த தலைவர்கள் சந்தனத்துடன் பிறந்தவர்கள் அல்ல. நான் மந்திரவாதியோ மாயாஜால காரனோ அல்ல என ஜனாதிபதி அனுரகுமார திஸநாயக்க சத்தியம் செய்ததை அடுத்து இந்த விடயம் நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்பட்டது.
பல நடைமுறைக் கேள்விகளுடன், பதில் கிடைக்கவேண்டும். வாக்களிக்காத, வாக்களித்த அனைவரினதும் ஜனாதிபதி என்ற வகையில் இந்த நாட்டு மக்கள் அனைவரும் அவருடன் அந்த சவாலுக்கு அணிதிரள வேண்டும். விமர்சனம் கூட ஆக்க பூர்வமானதாக இருக்க வேண்டும், அரசியல் நிகழ்ச்சி நிரல்களால் இயக்கப்பட கூடாது.
காலிமுகத்திடல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் வாகனங்களை பார்க்குமிடத்து, மக்களின் எவ்வளவு வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது. இது, கடந்த அரசாங்கத்தில் மட்டுமே செய்யப்பட்டது அல்ல.
முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்ரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஷ, சந்திரிகா குமாரதுங்க ஆகியோரின் ஆட்சி காலத்தில் ஜனாதிபதி செயலகத்தில் மட்டும் 29 வாகனங்கள் மாயமாகியுள்ளன. அதனை கண்டுப்பிடிக்கவேண்டியது புதிய அரசாங்கத்தின் கடப்பாடாகும். அதுமட்டுமன்றி, தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க, ஜனாதிபதியாகி இருக்காவிடின் இந்த வாகனங்கள் இன்னும் வீதிகளில் ஓடிக்கொண்டிருக்கும் மக்கள் அந்த சுமையையும் சுமந்துகொண்டிருப்பார்கள்.
இந்நிலையில், புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அடியெடுத்து வைத்திருக்கும் பாதை, கரடுமுரடானது. அதில் பயணிக்க வேண்டும். அந்த பயணத்துக்கு ஒத்துழைக்க வேண்டும். பாதை தவறினால் தட்டிக்கேட்டவும் தயங்கக் கூடாது என்பதே எமது வலியுறுத்தலாகும்.
26.09.2024
21 minute ago
37 minute ago
53 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
37 minute ago
53 minute ago
1 hours ago