Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Editorial / 2025 ஜனவரி 23 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சித்தோர்கார் மாவட்டத்தில் உள்ள சலேரா கிராமத்தில் உள்ள அரசுப் பாடசாலையில் தனது அலுவலகத்திற்குள் வைத்து பள்ளி முதல்வரும், ஆசிரியையும் அநாகரீகமான செயலில் ஈடுபடும் சிசிடிவி காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி வைரலானது. அந்த வீடியோவில் இருவரும் கட்டிப்பிடிப்பது, முத்தமிடுவது உள்ளிட்ட தகாத செயல்களில் ஈடுபடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இதையடுத்து பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியை இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து மாவட்ட கல்வி அதிகாரி ராஜேந்திர சர்மா கூறும்போது, "முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டுள்ளது. பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியை இருவரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
பள்ளி வளாகத்திற்குள் பள்ளி முதல்வரும், ஆசிரியையும் தகாத செயல்களில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
3 hours ago
3 hours ago
5 hours ago