2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அதிகரிப்பு

Freelancer   / 2021 டிசெம்பர் 04 , பி.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்ஆப்பிரிக்காவில் இருந்து மராட்டியத்துக்கு வந்த 33 வயது நபருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

கல்யாண் - டோம்பிவிலி பகுதியை சேர்ந்த 33 வயது நபர், தென் ஆப்பிரிக்க தலைநகர் கேப்டவுனில் இருந்து துபாய் மற்றும் டெல்லி வழியாக மும்பை வந்துள்ளார். 

இவர் இன்னும் ஒரு டோஸ் தடுப்பூசி கூட போட்டுக்கொள்ளவில்லை என்பதுடன், அவருடன் நேரடி தொடர்பில் இருந்த 12 பேர் மற்றும் அடுத்த நிலை தொடர்பில் இருந்த 23 பேரும் கண்டறியப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இல்லை. 

ஒமிக்ரோன்  தொற்றுக்குள்ளான நபர் வந்த டெல்லி - மும்பை விமானத்தில் பயணித்த அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் யாருக்கும் தொற்று ஏற்படவில்லை.

கர்நாடக மாநிலத்தில் இருவர் மற்றும் குஜராத்தை சேர்ந்த ஒருவருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. 

தற்போது மராட்டிய நபர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், இந்தியாவில் இதுவரை ஒமிக்ரோன் உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .