2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,000ஐ கடந்தது

Freelancer   / 2025 மே 28 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  1,009ஆக உயர்ந்துள்ளது

கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய மாநிலங்கள் முறையே முதல் மூன்று இடங்களில் உள்ளன.

 இதில் அதிகபட்சமாக கேரளாவில் 430 கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மகாராஷ்டிராவில் 209 பேருக்கும் டெல்லியில் 104 பேருக்கும் குஜராத்தில் 83 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அந்தமான் நிகோபார் தீவுகள், அருணாச்சல பிரதேசம், அசாம், பிஹார், இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர் போன்ற மாநிலங்களில் கரோனா தொற்று இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

கடந்த வாரம் மே 19ஆம் திகதி நாட்டில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 257ஆக இருந்தது. இந்நிலையில் ஒரு வாரத்தில் புதிதாக 752 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X