Freelancer / 2024 ஒக்டோபர் 13 , பி.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக் நேற்று முன்தினம் (12) இரவு சுட்டுக் கொல்லப்பட்டார்.
மும்பையின் பந்த்ரா கிழக்கு பகுதியில், சனிக்கிழமை (12) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திலேயே, இவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவத்துகுப் பிறகு மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, பாபா சித்திக் இறந்ததை உறுதி செய்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ஒருவர் தலைமறைவாகியுள்ளதாகவும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஹரியாணா, உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என, பொலிஸார் தெரிவித்துள்ளனர்
2 hours ago
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
11 Apr 2026