2026 மார்ச் 07, சனிக்கிழமை

பிரதமருக்கு கருப்பு கொடி காட்டுவதாக அறிவித்தவர் கைது

A.K.M. Ramzy   / 2021 மார்ச் 30 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னிமலை:

சுற்றுசூழல் ஆர்வலரும், சமூக செயல்பாட்டாளருமான முகிலன் தாராபுரத்துக்கு பிரதமரின் வருகைக்காக கருப்புக் கொடி காட்டுவதாக அறிவித்திருந்தார்.

 இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் எல்.முருகன் உட்பட கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட தாராபுரத்துக்கு வரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டுவதாக முகிலன் அறிவித்திருந்தவரைப் பொலிஸார் இன்று கைது செய்தனர்.

இதற்காக இன்று காலை 7.30 மணி அளவில் தனது சென்னிமலை வீட்டில் இருந்து கருப்பு சட்டை அணிந்து, கருப்பு கொடியுடன் முகிலன் புறப்பட்டார். இது பற்றி தகவல் தெரியவந்ததும் சென்னிமலை பொலிஸார் விரைந்து சென்று முகிலனை கைது செய்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .