2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மது அருந்துபவர்களைத் திருமணம் செய்ய வேண்டாம்‘

Ilango Bharathy   / 2022 டிசெம்பர் 27 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

குடிப்பழக்கம் உள்ளவர்களுக்குப்  பெண்களைத்  திருமணம் செய்து வைக்க வேண்டாம் என  மத்திய அமைச்சர் ‘கௌஷல் கிஷோர்‘ தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் லம்புவா சட்டசபை தொகுதியில் நடைபெற்ற ஒரு போதைப்பழக்க மீட்பு நிகழ்ச்சியில் கலந்து  கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது ”எனது மகன் ஆகாஷ் கிஷோருக்கு அவனது நண்பர்களால் மதுப்பழக்கம் ஏற்பட்டது.

அதனால் அவனை ஒரு போதைப் பொருள் மறுவாழ்வு மையத்தில் சேர்த்தோம். அவன் அப் பழக்கத்தில் இருந்து மீண்டுவிட்டதாகக்  கருதி, 6 மாதங்கள் கழித்து திருமணம் செய்துவைத்தோம். ஆனால் திருமணத்துக்குப் பின் னர் அவன் மீண்டும் குடிக்கத் தொடங்கினான்.

அதனாலேயே இறந்தும் போனான். 2 ஆண்டுகளுக்கு முன்பு அவன் இறந்தபோது என் பேரனுக்கு 2 வயதுகூட ஆகவில்லை. 'ஒரு குடிகாரரின் ஆயுட் காலம் மிகவும் குறுகியது. நான் ஒரு எம்.பி.யாகவும், என் மனைவி ஒரு எம்.எல்.ஏ.வாகவும் இருந்துமே எங்கள் மகனைக்  காப்பாற்ற முடியவில்லை.

 அப்படி இருக்கும்போது, ஒரு சாதாரண மனிதரால் எப்படி தங்கள் பிள்ளையைக் காப்பாற்ற முடியும்? நான் என் மகனை காப்பாற்றத் தவறியதால் என் மருமகள் விதவை ஆகிவிட்டார்.

தயவுசெய்து, உங்கள் மகள்கள், சகோதரிகளுக்கு இந்த நிலை வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு உங்கள் வீட்டு பெண்களைத்  திருமணம் செய்து கொடுக்காதீர்கள்.

குடிப்பழக்கம் உள்ள ஒரு அதிகாரியைவிட, அப் பழக்கம் இல்லாத ஒரு கூலித்தொழிலாளி நல்ல மாப்பிள்ளைதான். நம் நாட்டில் ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து நடந்த 90 ஆண்டு போராட்டத்திலேயே 6.32 லட்சம் பேர்தான் இறந்தனர்.

ஆனால் போதைப்பழக்கத்தால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 லட்சம் பேர் உயிரிழந்து வருகின்றனர்.

எனவே, போதைப்பழக்கத்தின் பாதிப்பு குறித்து மாணவப் பருவத்திலேயே, பாடசாலைக் காலைப் பிரார்த்தனையின்போது விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .