2025 ஜூலை 19, சனிக்கிழமை

மோடிக்கு காணி கொடுக்க முயன்ற 100 வயது மூதாட்டி

Freelancer   / 2023 ஜூன் 28 , பி.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் நரேந்திர மோடி  ஒருநாள் பயணமாக மத்திய பிரதேச தலைநகர் போபால் சென்றார். அங்கு ராணி கமலபதி ரயில் நிலையத்தில் இருந்து 5 வந்தே பாரத் ரயில் சேவைகளை அவர் ஆரம்பித்து வைத்தார்.

இந்நிலையில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த 100 வயது மூதாட்டி ஒருவர் பிரதமர் மோடியை தனது மகனாக கருதி தனக்கு சொந்தமான 6.6 ஏக்கர் நிலத்தை, அவருக்கு வழங்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

அவரது பெயர் மங்கிபாய் தன்வார். மத்தியபிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தை சேர்ந்தவர். இந்த மூதாட்டிக்கு 12 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். ஆனாலும் தனது பிள்ளைகளைவிட பிரதமர் மோடி மீது மிகுந்த அன்பு வைத்துள்ளார். தனது அறையிலும் பிரதமர் மோடி படத்தை மாட்டி வைத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X