Freelancer / 2024 டிசெம்பர் 10 , பி.ப. 05:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
மும்பையில், திங்கட்கிழமை (9) இரவு, மாநகர மின்சாரப் பஸ் ஒன்று வீதியோரம் நின்றிருந்தவர்கள் மீது மோதிய விபத்துக்குள்ளானதில், 3 இளைஞர்கள் உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும்,. 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளர்.
மும்பை - குர்லா மேற்கில் உள்ள எஸ்ஜி பார்வே மார்க் பகுதியில், அன்ஜும் இ இஸ்லாம் பள்ளி அருகே இந்த விபத்து நடந்துள்ளது.
இந்த விபத்தையடுத்து, பஸ் சாரதி கைது செய்யப்பட்டார். பஸ் வேகக்கட்டுப்பாட்டை இழந்ததாலேயே, இந்த விபத்து சம்பவித்துள்ளதாக, விசாரணையில் தெரியவந்துள்ளது.
முதலில் அந்தப் பஸ், 4 பேர் மீது மோதியதோடு, 100 மீற்றர் வரை தவறான திசையில் சென்று, இரண்டு முச்சக்கரவண்டிகள், மற்றும் சைக்கிள்களை மோதியுள்ளது.
இதற்கிடையில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 இலட்சம் (இந்திய பெறுமதி) நிதியுதவி வழங்க மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார்.
43 minute ago
50 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
50 minute ago
1 hours ago
2 hours ago