A.K.M. Ramzy / 2021 ஒக்டோபர் 14 , பி.ப. 01:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

சென்னை
உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் பூரண குணமடைய வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காய்ச்சல் மற்றும் உடல் பலவீனம் காரணமாக அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை காரணமாக அவரது உடல்நிலை சீராக உள்ளது. அவருக்கு தேவையான சிகிச்சைகள் முறையாக அளிக்கப்பட்டு வருகின்றன என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்மோகன் சிங் விரைவில் நலம்பெறவேடும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளதாக செய்திக் குறிப்பில் தெரிவிக்கிக்கப்பட்டுள்ளது.
28 minute ago
35 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
35 minute ago
45 minute ago