Freelancer / 2024 டிசெம்பர் 18 , மு.ப. 10:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
காஷ்மீரில், வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், சிறுவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தின் சிவா நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில், செவ்வாய்க்கிழமை (17) இரவு, திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதில், வாடகை வீட்டில் வசித்து வந்தவர்களில் 10 பேர் வரை சிக்கி கொண்டனர்.
அவர்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த 6 பேரில் 2 பேர் சிறுவர்கள் ஆவர்.
அத்துடன், நல்வர் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக அரசு மருத்துவ கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.
இதுபற்றிய முதல் கட்ட விசாரணையில், புகையால் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago