Editorial / 2022 பெப்ரவரி 22 , பி.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்த திருமணம் எங்கு,எப்படி நடந்தது என்பது பிரச்சினையில்லை. இருமணங்கள் இணைந்துள்ளன. அவ்விருவரையும் உற்றார், உறவினர்கள் நண்பர்களென பலரும் வாழ்த்துகூறியுள்ளனர்.
பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி தாலுகா நீலகுந்தா கிராமத்தை சேர்ந்தவர் பசவராஜ் (வயது 28). இவர் பீடா கடை நடத்தி வருகிறார். பசவராஜ் வெறும் 3 அடி உயரம் கொண்டவர் ஆவார். இதனால் அவருக்கு பல இடத்தில் பெண் தேடியும் வரன் அமையவில்லை.
இந்த நிலையில் விஜயாப்புரா மாவட்டம் கோலாரா தாலுகா கானி கிராமத்தை சேர்ந்த ருக்மணி கும்பார் என்ற பெண்ணுக்கு, பல்வேறு தோஷங்கள் காரணமாக திருமணம் தடைப்பட்டது.
இதுபற்றி அறிந்த பசவராஜ், ருக்மணியை திருமணம் செய்ய முடிவு செய்தார்.
இதன்பின்னர் 2 குடும்பத்தினரும் கலந்து பேசி பசவராஜ், ருக்மணி திருமணத்தை பெப்ரவரி 21-ந் நடத்துவது என்று முடிவு செய்தனர். அதன்படி நீலகுந்தா கிராமத்தில் வைத்து திருமணம் நடந்தது. இதில் இரு குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொண்டு புதுமண தம்பதியை வாழ்த்தினர்.
5 hours ago
05 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
05 Mar 2026