2026 மே 14, வியாழக்கிழமை

அடுக்குமாடி குடியிருப்பில் தீ ; 9 குழந்தைகள் உட்பட 19 பேர் உயிரிழப்பு

Ilango Bharathy   / 2022 ஜனவரி 10 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில்  அடுக்குமாடி குடியிருப்பொன்றில்  நேற்றைய தினம் (09) இரவு  ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 9 குழந்தைகள் உட்பட 19 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

இவ்விபத்தில் 32 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் உயிரிழப்பு அதிகரிக்கும் அச்சம் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் லேசான காயங்களுடன் 60 பேர் வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .