Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2025 ஜூன் 30 , பி.ப. 01:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
வியட்நாமில் விமானங்களின் இறக்கை உரசியதால் 4 விமானிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
வியட்நாம் தலைநகர் ஹனோயில் நொய் பாய் விமான நிலையத்தில் டியன் பியன் நகருக்கு ஏ-321 என்ற விமானம் புறப்பட தயாராக நின்றது.
அப்போது ஹோ சி மின் நகரத்துக்கு புறப்பட்ட வியட்நாம் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் அங்கு நின்று கொண்டிருந்த ஏ-321 விமானம் மீது உரசியது. இதில் அந்த விமானத்தின் இறக்கை சேதமடைந்தது.
இதனையடுத்து இரு விமானங்களிலும் இருந்த 386 பேரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் ஏ-321 என்ற விமானம் ஓடுபாதையில் சரியாக நிறுத்தப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக 4 விமானிகளை பணியிடை நீக்கம் செய்து வியட்நாம் ஏர்லைன்ஸ் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
6 hours ago
9 hours ago
05 Jul 2025