கனடாவில் புகைப்பிடிப்பதால் ஏற்படும் பாதிப்புக்களைக் குறைக்கும் வகையிலும், அது குறித்த விளிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையிலும் ஒவ்வொரு சிகரெட்டின் மீதும் எச்சரிக்கை வாசகம் ஒன்றை பதிவு செய்ய அந் நாட்டு அரசு தீர்மானித்துள்ளது.
இது குறித்து கனடாவின் மனநலம் மற்றும் போதைக்கு அடிமையாதல் துறைக்கான அமைச்சர் கரோலின் பென்னட் கருத்துத் தெரிவிக்கையில் ” புகைப்பிடிக்கச் செல்லும் இளைஞர்கள் சிகரெட் பெட்டியின் மீது உள்ள எச்சரிக்கை வாசகங்களைப் புறந்தள்ளிவிட்டு செல்கின்றனர்.
எனவே வருகின்ற 2023 வருடத்தின் இரண்டாவது அரையாண்டிலிருந்து
ஒவ்வொரு சிகரெட்டின் மீதும் எச்சரிக்கை வாசகம் பதிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதோடு, ‘ஒவ்வொரு தடவையும் இழுக்கும்போது விஷம் உள்ளே செல்கிறது‘ என்ற வாசகம் பதிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் உலக அளவில் ஒவ்வொரு சிகரெட்டுகள் மீதும் எச்சரிக்கை வாசகம் பதிக்கும் முதல் நாடாக கனடா மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.