Ilango Bharathy / 2022 பெப்ரவரி 08 , பி.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
முதல் குழந்தை பிறந்து எட்டு மாதங்களே ஆன நிலையில் அடுத்த குழந்தையைப் பெண்ணொருவர் பெற்றெடுத்த சம்பவம் பிரித்தானியாவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவைச் சேர்ந்த 27 வயதான லூஸி என்பவரே இவ்வாறு கடந்த 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பெண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்துள்ளதோடு எட்டு மாத இடைவெளியில் இரண்டாவது குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார்.

அவரது முதல் குழந்தை பிறந்து 3 மாதங்களாக அவருக்கு மாதவிடாய் ஏற்படவில்லை எனவும், இது குறித்து மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து பார்த்த போதே அவர் 2 ஆவது முறை கர்ப்பம் தரித்திருந்தமை தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அதிர்ச்சியில் மூழ்கிய லூஸி, வேறு வழியின்றி இரண்டாவது குறை பிரசவத்தில் பெற்று எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவமானது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ள நிலையில், குறித்த குழந்தைகளின் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
9 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
25 minute ago