Freelancer / 2023 ஒக்டோபர் 12 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்தின் பெட்போர்ட்ஷையர் மாகாணத்தின் முக்கிய நகரில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
நேற்றிரவு குறித்த பகுதியில் கார் நிறுத்தப்பட்டிருந்த கட்டிடத்தின் 3-வது தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் கட்டிடம் முழுவதும் தீ பரவியுள்ளது.
தீயணைப்பு படையினர் 15-க்கும் மேற்பட்ட வாகனங்களில் குறித்த பகுதிக்கு விரைந்தனர். பொலிஸாரின் உதவியுடன் தீ பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்தில் 1500-க்கும் மேற்பட்ட கார்கள் தீயில் கருகி முற்றிலும் சேதமடைந்துள்ளன.
குறித்த விபத்தில் உயிர் சேதம் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அங்குள்ள பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

3 minute ago
37 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
37 minute ago
42 minute ago