2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

சீன நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்ய தாய்வானில் கட்டுப்பாடு

Freelancer   / 2025 ஜூன் 16 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவுக்கு ஆதரவாக,  சீனாவின் ஹவாய் டெக்னாலஜீஸ், சர்வதேச செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனம் போன்றவை ஏற்றுமதி கட்டுப்பாடு பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளன.

சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான் 1949இல் தனி நாடாக பிரிந்து சென்றது. அதனை மீண்டும் தன்னுடன் இணைக்க சீனா துடிக்கிறது. இதற்காக தாய்வான் எல்லைக்குள் போர்க்கப்பல் மற்றும் விமானங்களை அனுப்பி பதற்றத்தை தூண்டுகின்றது. அதேபோல் வேறு எந்த நாடுகளும் தாய்வானுடன் தூதரக உறவு வைத்துக்கொள்ளக்கூடாது எனவும் சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆனால் சீனாவின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் தாய்வானுக்கு ஆதரவாக அமெரிக்கா செயற்படுகிறது. இதற்கிடையே அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தக போர் அதிகரித்து வருகிறது. 

இதனையடுத்து அமெரிக்காவுக்கு ஆதரவாக சீனாவின் ஹவாய் டெக்னாலஜீஸ், சர்வதேச செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனம் போன்றவற்றை ஏற்றுமதி கட்டுப்பாடு பட்டியலில் சேர்த்துள்ளது.

 இதனால் அந்த நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்யும் முன்பு அரசின் அனுமதியை பெற வேண்டும். அதேபோல் தலீபான், அல்-கொய்தா போன்ற அமைப்புகளும் இந்த தடை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X